×

திமுக ஆட்சி அமைந்தவுடன் விராலிமலை தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் உறுதி

விராலிமலை, மார்ச் 26: திமுக அரசு அமைந்த உடன் விராலிமலை தொகுதியில் சாலை, பேருந்து மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் என திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் உறுதியளித்தார்.
விராலிமலை சட்ட மன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பபாளர் தென்னலூர் பழனியப்பன் நேற்று குன்றாண்டார் கோவில் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மேலபுதுவயல், ஒடுக்கூர், லக்கனாபட்டி, தாயனிப்பட்டி, குளத்தூர் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் பேசியதாவது: பல்வேறு பகுதியில் சாலைவசதி, பேருந்து வசதி மற்றும் குடிநீர் வசதி வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். திமுக அரசு அமைந்த உடன் விராலிமலை தொகுதியில் சாலை, பேருந்து மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும், மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளாக பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைதொகை, 100 நாள் வேலைதிட்டம் 150 நாளாக உயர்த்தி 300 ரூபாய் சம்பளம், சமையல் கேசுக்கு100 மானியம், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களை அறிவித்துள்ளர். முதியோர் உதவி தொகை, மாற்று திறனாளிகள் உதவிதொகை முறையாக வழங்கப்படவில்லை. ஆதலால் தான் இல்லத்தரசிகளுக்கு உரிமை தொகை ஆயிரம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தளபதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தால் மட்டும் தான் பெண்களுக்கான நலதிட்டங்கள் கிடைக்கும். தளபதி ஸ்டாலின் வாக்காளர்களான உங்களை நம்பி மீண்டும் எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார். எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் மதசார்தபற்ற தேசிய முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : DMK ,Tennalur Palaniappan ,Viralimalai ,
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்